Header Ads

test

மாவட்ட அலுவலகம் படையினரால் உடைப்பு?


தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு மருத்துவ மனைக்கு எதிராக உள்ள வீதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகம் படையினரால் உடைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தி.கிந்துஜன், புதுக்குடியிருப்பு காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி செஞ்சோலையில் உயிரிழந்த மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்னிலையில் 16.08.18 அன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் யாரும் இல்லாத வேளை அங்கு சென்ற 8 படையினர் கதவினை உடைத்து உட்புகுந்துள்ளதுடன் சேதப்படுத்தியுள்ளதாகவும் இதனை அருகில் இருந்த அயலவர்கள் நேரில் கண்டு வீட்டின் உரிமையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அதன் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
அலுவலகம் தாக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த சம்பவத்தை பதிவுசெய்துய்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments