Header Ads

test

இங்கிலாந்து அணியை 2-1 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோசியா

உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை 1-2 என்ன இலக்கைப் போட்டு குரோசியா அணி இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது.

ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு இலக்கை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் இலக்கையும் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடி 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு இலக்கை அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் ஆட்டம்தொடர்ந்தது.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை. எனினும் 90 நிமிடங்களில் ஆட்டம் முடிவடைந்து.
இரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு இலக்கை அடித்தார்.

இதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments