இரஞ்சன் இராமநாயக்க வெற்றுவேட்டு:வடக்கு முதலமைச்சர்!

இலங்கை அமைச்சர் ரஞ்சன் இராமநாயக்க ஒரு வெற்றுவேட்டு என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவரை வடக்கை வந்து பார்த்து மக்களின் கருத்துக்களை அறிந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கைக்கு நடிகபாராளுமன்ற உறுப்பினர் இரஞ்சன் இராமநாயக்க ஒத்துக்கொண்டுள்ளமை பற்றி தெரிவிக்கையில் அவர் தனிசிங்களத்தில் கடிதங்கள் அனுப்பியுள்ளார். 

 அவற்றை மொழி பெயர்க்கக் கொடுத்துள்ளேன். தொடக்கமே பிழைபோலத்தெரிகிறதெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் நான் அவருக்கு வடக்குக்கு வந்து செல்லுமாறு கூறியதன் பின்னரே அவர் விஜயகலா சம்பந்தமாக அவரிடம் சம்மதம் பெறாமல் அவருடனான கருத்துப் பரிமாற்றங்களை வலைப்பின்னல்களுக்கு வெளியிட்டுள்ளார். இது ஒரு குற்றமாகக் கணிக்கக்கூடியவிடயம்;. குறித்த நபரை வடக்கிற்கு வருமாறு அழைத்ததின் பின்னர் நடைபெற்ற அவர் சார்பான நிகழ்வுகளும் அவர் பற்றி என் கொழும்பு நண்பர்கள் கூறிவருவதும் அவ்வளவு ஏற்புடையதாகத் தெரியவில்லை. 

இவர் வடக்கு வந்து உண்மையை அறிந்து தெற்கிற்கு தெரியப்படுத்தக்கூடிய ஒருவராகத் தெரியவில்லை. நான் அவரை காலஞ்சென்ற விஜய் குமாரணதுங்க போன்ற ஒருவர் என்றே முதலில் எண்ணினேன். என் எண்ணம் தவறென இப்போது தெரிகின்றதெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment