Header Ads

test

புளியங்குளத்தில் அதிகாலையில் கோர விபத்து - 5 பேர் படுகாயம்!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புளியங்குளம், இராமனூர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கொள்கலன் வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது. இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



No comments