Header Ads

test

எழுதாத உன் கவிதை? அபிமன்யூ காவியா


கவிக்குத் தலைப்பு தந்த நீ
முடியாத ஒன்றில் தான்
முடிந்து போனதாக
முதல் அத்தியாயம் எழுதி
"தொடரும்" இட்டார்கள்.
பின் வந்த நாளொன்றில்
உன் தோழர்கள்
முடியாததை 'முடி'யாக்கி
கிரீடம் சூட்டினர்.
"தொடரும்... தொடரும்..." எனத் தொடர்ந்த
உன் கவிதை அத்தியாயங்கள்
அன்றுடன் "முற்றும்" என இறுமாந்திருந்தோம்.
ஏமாற்றம் பரிசாக இம்முறை
மாற்றானே "தொடரும்..." இட்டான்.
இப்போது...
அந்தரத்தில் உன் எழுதி முடிக்காத கவிதை.
கூடவே நிரம்பி வழியும்
'சிவப்பு' மையுடன் ஒரு பேனா.
எழுதப்பட்ட வரலாறுகளின் மேல்
சாயம் பூசி அழிக்கப்படுமா...?
அல்லது
முடிவுரை எழுதி 'முற்றும்' இடப்படுமா...?

அபிமன்யூ காவியா

No comments