கப்பலேந்தி மாதா தாக்குதல்:முன்னணி கண்டிக்கின்றதாம்!

மன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றஞ்சுமத்தியுள்ளது.அத்துடன் இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற அனுமதிக்க முடியாதெனவும் முன்னணி அறிவித்துள்ளது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம் நீண்டகாலமாக வருடத்திற்கு மூன்று நான்கு தடவைகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஆலய நிர்வாகத்தினரால் ஸ்ரீலங்கா காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும், தாக்குதலாளிகளுக்கு பக்கபலமாக விளங்கும் அமைச்சர் ஒருவர் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது மறைமுக ஒத்துழைப்புடன் தனது செல்வாக்கை பாவித்து குற்றவாளிகளை தப்பிக்கச் செய்யும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வருகின்றது. 

மதரீதியாகவும் இனரீதியாகவும் அப்பாவி மக்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாமல் தொடர்ந்தும் தப்பிக்க ஒத்துழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இனங்களுக்கு இடையில் பாரிய பிளவுகளை உண்டுபண்ணும் ஆபத்துள்ளது. 

தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டித்துள்ளதுடன் இனங்களுக்கிடையில் முறுகல் ஏற்படுவதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படல் வேண்டுமெனவும் கோருவதாகவும் தெரிவித்துள்ளது.  

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment