Header Ads

test

யாழிலிருந்து கொழும்பு சென்றவரைக் காணவில்லை.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணமல் போயுள்ளார்.

காணாமல் போனவர் சாவகச்சோி கச்சாய்ப் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிவராசா உதயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது குடும்பத்தினர் கொடிகாமம் காவல்நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிந்துள்ளனர்.

கடந்த 21 ஆம் நாள் வீட்டிலிருந்து கொழும்பு செல்வதாகவே உதயகுமார் கூறிவிட்டுச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments