Header Ads

test

யாழில் பன்றிக் காய்ச்சல்! இனம் காணப்பட்டனர் 12 பேர்!

பன்றிக் காய்ச்சல் (இன்புளுவன்ஸா வைரஸ்) எனப்படும் தொற்று நோய்க்கான அறிகுறிகளோடு கடந்த சில நாட்களாக 12 பேர் யாழ்ப்பாண மருத்துவமனைகளில் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறித்த நோய் குறித்து யாழ்ப்பாணப் பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவின் அதிகாரி மருத்துவர் ஜி.ரஜீவ் தெரிவிக்கையில்:

கடந்த சில நாட்களாக ‘இன்­பு­ளு­வன்ஸா வைரஸ்’ தொற்­றுக்­கான அறிகு­றி­கள் கொண்ட 12 பேர் யாழ் மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களின் குருதி மாதிரிகள் மேலதி பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்­போ­தைய கால­நிலை இந்த நோய் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பாக இருக்கின்­றது. 2008 மற்­றும்  2009ஆம் ஆண்­டு­க­ளி­லும் இந்த நோய் தாக்­கம் இனங்­கா­ண­பட்­டது. எனி­னும் கட்­டுப்­பாட்­டுக்­குள்  கொண்­டு ­வரப்­பட்­டது என்று மருத்­து­வர் மேலும் தெரி­வித்­தார்.

No comments