Header Ads

test

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர விளக்கமறியலில்


ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்டார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக இவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி கடத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments