Header Ads

test

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களுக்கு ஆபத்து!


பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரேரணையில் கைச்சாத்து பெரும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கின்ற சுதந்திர கட்சியின், தயாசிறி ஜெயசேகர, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, சுசில் பிரேமஜெயந்த போன்றவர்கள், பிரதமர் மீதான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.

இந்தநிலையில் அவர்களுக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியினால் அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது

No comments