Header Ads

test

மன்னாரில் துருப்பிடிக்கப்பட்ட மோட்டார் எறிகணைகள் மீட்பு

மன்னார் பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் நேற்று மோட்டார் எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது 81 ரக மோட்டார் எறிகணைகள் 15 மற்றும் 61 ரக மோட்டார் எறிகணைகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் வாடி அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மீனவர் கடந்த 13 ஆம் திகதி காலை கடற்கரை பகுதியில் குழி தோண்டிய போது இரும்புப்பெட்டியை அவதானித்து அருகிலுள்ள கடற்படையினரிடம் தெரிவித்து பின்னர் பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குறித்த குழியில் இருந்து மோட்டார் எறிகணைகள் மீட்டனர். மீட்கப்பட்ட குண்டுகள் பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுப்பகுதியில் செயழிலக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments