Header Ads

test

முல்­லைத்­தீ­வில் முளைக்­கும் புத்­தர்­கள்!!


முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் உள்ள பிள்­ளை­யார், அம்­மன் சிலை­க­ளுக்கு நடுவே புத்­த­ பி­ரான் முளைக்­கின்­றார் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் தெரி­வித்­தார். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் சிங்­க­ளக் குடி­யேற்­றங் கள் தொடர்­பில் ஆராய்­வ­தற்­கான வடக்கு மாகாண சபை­ளின் சிறப்பு அமர்வு நேற்று நடை­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-, தமிழ் மணம் பரப்பி பரந்து விரிந்து கிடந்த தமி­ழர்­க­ளின் தொன்­னி­ல­மான மண­லாற்­றுப் பிர­தே­சத்­தில் தற்­போது சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு அவற்­றுக்கு புதிய சிங்­க­ளப்­பெ­யர்­கள் சூட்­டப்­பட்டு தமி­ழர்­க­ளின் அடை­யா­ளங்­கள் யாவும் அழிக்­கப்­பட்­டுள்­ளன. தொன்­னில தமிழ்ப் பிர­தே­ச­மா­கச் செழித்­தி­ருந்த பகுதி தற்­போது சிங்­க­ளப் பெயர்­க­ளோடு சிங்­க­ளப்­ப­கு­தி­க­ளாக காட்­சி­ய­ளிக்­கின்­றது. தமி­ழர்­க­ளின் தாய­கப் பிர­தே­சங்­க­ளா­கிய வடக்­கை­யும், கிழக்­கை­யும் துண்­டா­டு­வ­தற் காக மண­லாற்­றில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதற்­கு­ரிய கரு­வி­யாக மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. தமி­ழர்­க­ளின் பல பண்­ணை­க­ளு­டன் பல்­லா­யி­ரம் ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் வியா­பித்­தி­ருந்த மண­லாற்­றுப்­ப­கு­தி­யில் இருந்த மக்­கள் 1978ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் வெளி­யேற்­றப்­பட்­டார்­கள். 1984 மார்­கழி மாதம் வெளிப்­ப­டை­யான அறி­வித்­தல் மூலம் வெளி­யேற்­றப்­பட்ட கொக்­கி­ளாய் கிழக்கு, கொக்­கி­ளாய் மேற்கு, கரு­நாட்­டுக்­கேணி, கொக்­குத்­தொ­டு­வாய் தெற்கு, கொக்­குத்­தொ­டு­வாய் மத்தி ,கொக்­குத்­தொ­டு­வாய் வடக்கு ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளைச் சேர்ந்த மக்­கள் இறுதி போர் முடி­வுற்ற பின்­னர் 2010-2011 காலப்­ப­கு­தி­க­ளில் மீளக்­கு­டி ­யேற அனு­ம­திக்­கப்­பட்­ட­னர். மீள்­கு­டி­யேற்­றப்­பட்ட இந்த மக்­க­ளின் 90சத­வீ­தம் ஆனோர் விவ­சா­யி­க­ளா­வார். இடப்­பெ­யர்­வுக்கு முன்­னர் தமது நாளாந்த இருப்­புக்­காக விவ­சா­யம் செய்த நிலங்­களை இவர்­கள் மீளக் கு­டி­யே­றி­ய­போது இழந்­த­னர். இவர்­க­ளால் தலை­முறை தலை­மு­றை­யாக பயி­ரி­டப்­பட்டு வந்த இந்த வயல் நிலங்­கள் மகா­வலி எல் வல­யத்­தின் ஒரு அபி­வி­ருத்தி திட்­டம் எனக்­கூ­றப்­ப­டும் “கிவுல் ஓயா” திட்­டத்­தின் கீழ் சிங்­கள மக்­க­ளுக்கு மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யால் வழங்­கப்­பட்டு இன்று சிங்­கள மக்­க­ளால் விவ­சா­யம் செய்­யப்­பட்டு வரு­கின்­றது. 2013ஆம் ஆண்­டில் நிர்­வாக எல்­லை­கள் எதை­யும் கொண்­டி­ராத இந்­தப் பிர­தே­ச­செ­ய­லா­ளர் பிரி­வுக்கு 2013.05.17ஆம் திக­திய 1811ஆம் இலக்க வர்த்­த­மானி மூலம் எல்­லை­கள் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தீர்­மா­னிக்­கப்­பட்ட எல்­லை­கள் 171ஃ7 ஆம் இலக்க 2012 ஜன­வரி 24ஆம் திக­திய அதி­வி­சேட வர்த்­த­மா­னி­யில் குறிப்­பி­டப் பட்ட கரை­து­றைப்­பற்று பிர­தே­ச­செ­ய­லா­ளர் பிரி­வின் எல்­லை­க­ளு­டன் மேற்­பொ­ருந்­து­வ­தாக உள்­ளது. விகா­ரை­கள், புத்­தர்­சி­லை­கள் குடி­யேற்­றங்­க­ளுக்கு முன்­னேற்­பா­டாக பௌத்­தர்­களே இல்­லாத இங்­க­ளில் பௌத்த விகா­ரை­களை அமைக்­கும் நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக் கப்ப­டு­கின்­றது. போர்க் காலத்­துக்கு முன் ஒரு விகா­ரை­யும் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இல்லை. இப்­போது 11 விகா­ரை­கள் உள்­ளன என்று புள்­ளி­ வி­வ­ரங்­கள் சுட்­டிக்­காட்டி காட்­டு­கின்­றது. கொக்­கு­ளா­யில் இரா­ணு­வத்­தி­ன­ரின் துணை­யோடு தமிழ் மக்­க­ளின் காணி­யில் அம்­மன் கோவில் இருந்த இடத்­தில் தற்­போது பௌத்த விகாரை கட்­டப்­ப­டு­கின்­றது. நாயாற்­றுப்­ப­கு­தி­யி­லும் பிள்­ளை­யார் சிலைக்கு அரு­கில் விகாரை அமைக்­கப்­ப­டு ­கின்­றது. அதற்கு முன்­பாக இரா­ ணுவ முகாம் இருக்­கின்­றது. இவற்­றைப் பெரும் குடி­யேற்­றத் துக்­கான ஆரம்ப வேலை­க­ளா­கக் கருத முடி­கி­றது. புதிய திட்­ட­மி­டல் போர் முடி­வுற்று மக்­கள் மீள்­கு­டி­ய­மர்ந்த மிக­வும் நெருக்­க­டி­யான 2011ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் அப்­போது இருந்த இரா­ணு­வத் தள­ப­தி­யின் அழுத்­தத்­தால் நாயாற்­றுப்­ப­கு­தி­யில் 78 பட­கு­கள் கொண்டு தென்­னி­லங்கை மீன­வர் தொழில் செய்­யும் நிலை ஏற்­பட்­டது. 78 என்­பது அடுத்த அடுத்த ஆண்­டு­க­ளில் தற்­போது 300 ஆக உயர்ந்­துள்­ளது. இவர்­கள் பெரும்­பா­லும் தடை­செய்­யப்­பட்ட தொழில்­க­ளையே செய்­கின்­றார்­கள். சமூ­க­மு­ரண் செயல்­க­ளுக்­கும் துணை­போ­கின்­றார்­கள். அந்­தப் பகு­தி­யில் கசிப்பு விற்­கப்­பட்டு, சந்­தே­க­க­ந­பர்­கள் நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்­டமை, சிலா­பம் “இர­ண­வில” பகு­தி­யில் அண்­மை­யில் சிறு­வன் ஒரு­வன் கொல்­லப்­பட்­டமை தொடர்­பி­லான குற்­ற­வாளி இந்­தப் பகு­தி­யில் வைத்த கைது­செய்­யப்­பட்­டமை ஆகி­ய­வற்­றைக் குறிப்­பி­ட­லாம். ஒரு குறிப்­பிட்ட மாகா­ணத்­தின் மக்­கள் பரம்­பல் மாதி­ரியை இயற்­கைக்கு முர­ணான வகை­யில் மாற்­று­வது அர­சின் காணிக்­கொள்­கை­யாக அமை­யக்­கூ­டாது. இது கற்­றுக்­கொண்ட பாடங்­கள் மற்­றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழு­வின் விதந்­துரை 9.1.2.4 இல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இப்­போது இப்­ப­கு­தி­க­ளில் நடை­பெ­றும் – நடை­பெற்று கொண்­டி­ருக்­கும் நிகழ்­வு­களை பார்க்­கும் போது தமி­ழர்­க­ளின் இருப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது –- என்­றார்.

No comments