Header Ads

test

பாஸ்டரிடம் ஆசீர் பெற்ற 346 பேர் கிளியர்

யாழ்ப்பாணம் - அரியாலை தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ம் திகதி இடம்பெற்ற சுவிஸ் பாஸ்டரின் ஆராதனையில் பங்கேற்ற 346 பேர்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவருக்குமான கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் இன்றுடன் (23) முடிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மேலும்,

நல்லூர் மருத்து அதிகாரி பிரிவைச் சேர்ந்த 28 பேருக்கும், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நால்வருக்கும் அவர்களைப் பராமரித்த இராணுவ வீரர்கள் நால்வருக்கும் என 36 பேருக்கு இன்று கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் கோரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. - என்றார்.

இந்த 346 பேரில் 16 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகியது. இந்த பரிசோதனைகளுக்கு முன்னர் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments