Header Ads

test

வீட்டாரை கட்டிப்போட்ட கும்பல்!! -அங்கு செய்த மர்மசெயலால் திகைக்கும் பொலிஸார்!

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு – நாதன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டுவிட்டு மர்மமான செயல் ஒன்றை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
7 பேரைக் கொண்ட குறித்த கும்பல் செய்த மர்மமான செயல் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவதாததை அடுத்து பொலிஸார் மத்தியில் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் உள்ள வீட்டில் நடக்கமுடியாத பெண்ணும், அவருடைய மகனும் இருந்த நிலையில் அங்கு வந்த 7 பேர் கொண்ட குழுவினர் அவர்களின் வாயைக் ஒரு அறைக்குள் இருவரையும் வைத்து பூட்டியுள்ளனனர்.
இதன் பின்னர் வீட்டுக்கு பக்கத்தில் கிடங்கொன்றை தோண்டி பின்னர் அந்த கிடங்கை மூடிவிட்டுச் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, நீதிமன்ற அனுமதியுடன் அங்கு வந்த பொலிஸார் அக் கும்பலால் தோண்டப்பட்டு மூடப்பட்ட கிடங்கினை மீண்டும் தோண்டி வருகின்றார்கள்.
குறித்த கும்பல் எதற்கான இந்த மர்மமான காரியத்தில் ஈடுபட்டது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸர் தெரிவித்தனர்.

No comments