Header Ads

test

மட்டு. சீயோன் தேவாலய தாக்குதலில் காயமடைந்திருந்த ஒருவர் நேற்று மரணம்!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் நேற்று மாலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.


 மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த செ.அருண்பிரசாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர், சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிசிச்சை பிரிவில் சிசிச்சை பெற்றுவந்தார்.

மேலதிக சிகிச்சைகளுக்காக உலங்குவானூர்தி மூலம் கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 47 நாட்களாக தொடர்ச்சியாக சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையிலே நேற்று உயிரிழந்துள்ளார்.


இதையடுத்து, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது

No comments