Header Ads

test

இலங்கை கடற்படை தாக்கவில்லை:நடந்தது படகு விபத்தாம்?

இந்திய மீனவர்கள் இலங்கை கடற் படையினரின் தாக்குதலில் காயமடையவில்லையென அரசு ஆதரவு விசுவாசிகள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர்.
அவ்வகையில்  இலங்கை கடற்படையின் டோறா விசைப்படகுடன் மோதி ஏற்பட்ட விபத்தின்போதே எமது சக மீனவரான முன்னச்சாமி உயிரிழந்தார் என இலங்கை காவல்துறை கணக்கினை மாற்றியெழுதியுள்ளதாக தற்போது குடும்பங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்த குற்றச் சாட்டில் இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினரின் பாரிய படகினை சிறிய இந்திய மீனவர்களது படகின் அருகே அணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது.அந்த நேரம் கடற்படையினரின் இரும்பு படகு மரத்தினால் தயாரிக்கப்பட்ட படகுடன் மோதியது. இதன்போது படகில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்ததாக புதிய கதை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இரண்டாவது இந்திய மீனவர்களது படகும் கடற்படையினரின் படகுடன் மோதியே சேதமடைந்ததாகவும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்க்பபட்டுள்ளது. 
எனினும் கைதான மீனவர்களது உடலில் காணப்பட்ட அடிகாயங்கள் படகு விபத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவரது கொலை மற்றும் தாக்குதலையடுத்து எழுந்துள்ள சிக்கல்களையடுத்தே தற்போது உயர்மட்ட தலையீட்டில் கதை மாற்றியெழுதப்பட்டதாக தெரியவருகின்றது.

No comments