Header Ads

test

வைரமுத்து மீது மீண்டும் அடுத்தடுத்து புகார்!

பாடலாசிரியர் வைரமுத்து மீது சகப் பாடலாசிரியரான கார்த்திக் நேத்தா கூறியக் குற்றச்சாட்டை அடுத்து இப்போது மற்றொருப் பாடலாசிரியரான யுகபாரதியும் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


சமீபமாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வருகின்றன சற்குனம் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் போறானே போறானே என்ற பாடலை கார்த்திக் நேத்தா எழுதியிருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அந்த ஒருப் பாடலை மட்டும் அவர் எழுதவில்லையாம். படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ’சரசர சாரக்காத்து வீசும்போது’ என்ற பாடலையும் அவர்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பாடலின் சில வரிகளை மாற்றிப் போட்டு தான் எழுதியது போல வைரமுத்து உபயோகப்படுத்திக் கொண்டதாக சமீபத்தைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

 அதனால் இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறி விவாதத்திற்குள்ளாகியுள்ளது. கார்த்திக் நேத்தாவை அடுத்து பிரபல பாடலாசிரியான யுகபாரதியும் வைரமுத்து மீது இதேக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது சம்மந்தமாக அவர் கடந்த ஆண்டு பேசிய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

’தென்றல் என்ற படத்தின் பிரபல பாடலான புத்தம் புது பாட்டெடுத்தேன் தாண்டவக்கோனே என்ற பாடலின் ஆரம்ப வரிகளைத் தான் எழுதியதாகவும் அந்த வரிகளைக்கொண்ட அந்தப் பாடலுக்கு  மெட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் வெளியான போது யுகபாரதிக்கு எந்த விதமான கிரெடிட்ஸும் கொடுக்காமல் வைரமுத்துவின் பெயரில் பாடல் வெளியாகியுள்ளது’ எனவும் கூறியுள்ளார்.


கேரளாவைச் சேர்ந்த ஷனிலா, ரேஷ்மா ஆகிய இருவரும் இன்று சபரிமலைக்கு சென்றதாகவும், அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாகவும், இரண்டு பெண்களுக்கு எதிரான போராட்டம் முற்றியதால் இருவரையும் போலீஸார் திருப்பி அனுப்பியதாகவும் அங்கிருந்து வெளிவந்துள்ள செய்திகள் கூறுகின்றன.

No comments