Header Ads

test

கோட்டையை காதலர்களிடமிருந்து காப்பாற்ற இராணுவமாம்!


யாழ்.கோட்டையிலுள்ள தொல்லியல் பொருட்களை காதலர்களிடமிருந்து பாதுகாக்கவே இராணுவம் வந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு மற்றும் தொல்லியல் திணைக்களமென்பவை காவல்துறையின் காவலரண் ஒன்றினை கோரியிருந்தன.குறித்த காவல்துறையின் பாதுகாப்பிற்கென தெரிவித்தே பின்னர் படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் யாழ்.பல்கலைக்கழக தொல்லியல் பிரிவு தற்போது குறித்த விடயம் தொடர்பில் மௌனம் காத்துவருகின்றது.

இதனிடையே யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. 


யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றமை உண்மையே. ஆனால் அதற்குள் இராணுவ முகாம் அமைப்பதற்கு இதுவரையில் அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. 

கோட்டை பகுதி யுத்த காலத்தின் போது இராணுவ வசம் இருந்த போதிலும் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கோட்டையை விட்டு பெருமளவான இராணுவத்தினர் வெளியேறி இருந்தனர். 

இருந்த போதிலும் அதற்குள் மினி முகாம் ஒன்றினை அமைத்து அதனுள் சுமார் பத்து தொடக்கம் பதினைந்து வரையிலான இராணுவத்தினர் கோட்டைப்பகுதிக்குள் நிலை கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தற்போது இராணுவத்தினர் கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்கு தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளனர். 

கோட்டைக்குள் பாரிய இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினர் அனுமதி கோரி இருந்தனர். அதற்கான எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. 

தற்போது இராணுவத்தினர் முகாம் அமைப்பதாக கூறப்படும் செய்தி , இராணுவத்தினர் தாம் இருந்த மினி முகாமை மாற்றி வேறு இடத்தில் அமைக்கின்றனர். 

கோட்டைக்குள் இராணுவத்தினர் மினி முகாம் அமைத்திருந்த கட்டடத்தை கையளிக்க கோரி இருந்தோம். அதானால் அந்த கட்டடத்தை எம்மிடம் கையளித்து விட்டு அருகில் தற்காலிக கட்டடங்களை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். 

ஏற்கனவே இராணுவ தரப்பினருக்கு சொல்லப்பட்டு உள்ளது. மிக குறைந்த அளவிலான இராணுவத்தினர் தங்கும் மினி முகாம் ஒன்றே கோட்டைக்குள் இருக்கலாம் என அதனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம் ஒரு மினி முகாமே என தெரிவித்துள்ளனர்.

No comments