சவாலுக்கு அழைக்கிறார் தவராசா?



வட மாகாண சபையின் விடேச அமர்வில் கேட்காத தனது உரையினை மீளக்கேட்கும் வகையில் பகிரங்க விவாதமொன்றிற்கு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கோரிக்கைவிடுத்துள்ளார்.

வடமாகாணசபையின் நிறைவேற்றுச் செயற்பாடுகள் இன்று முடங்கிய நிலையில் உள்ளது. இவ்வாறாக அதன் செயற்பாடுகளை முடங்கவிடாது வட மாகாண சபையின் அமைச்சர் சபை தொடர்பில் நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை என்ற விடயப் பரப்பில் விவாதித்து தீர்வொன்றைக் காண்பதற்காக மாகாண சபையின் விசேட அமர்வு ஒன்று கடந்த 16ம் திகதி அன்று கூட்டப்பட்டதாக தவராசா விளக்கமளித்துள்ளார்.

அக்கூட்டத்தில் பங்குபற்றி அங்கு விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விடயங்களிற்குத் தகுந்த பதிலளிக்காமல் கூட்டத்தையே புறக்கணிப்பு செய்துவிட்டு ஊடகங்களிற்கான பதிலென்று முதலமைச்சர் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பதாகவும் சி.தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தம்மால் எழுப்பப்படும் கேள்விகளிற்கு அவரினால் மக்களிற்கு நேர்மையானதும் உண்மைத்துவமானதுமான பதில் அளிக்க முடியுமாயின் அவரைப் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் தற்போது மாகாண சபையில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக மட்டுமல்ல, கடந்த நான்கு வருடம் ஒன்பது மாதங்களாக மாகாண சபையின் நிறைவேற்று செயற்பாட்டின் வினைத்திறனின்மை தொடர்பாகவும் மக்களிற்குப் பதிலளிக்கும் முகமாகவும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பதாகவும் தவராசா தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment