புதன்கிழை வரை காலக்கெடு!

வடமராட்சி கிழக்கிலிருந்து புதன்கிழமைக்குள் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றப்படாவிட்டால் வடமராட்சி மீனவர்கள் சட்டத்தை கையில் எடுப்பார்கள், தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி போதும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்..


தென்பகுதி  மீனவர்களை உடனடியாக வடமராட்சி கிழக்கிலிருந்து வெளியேற்றுமாறு நாங்கள் தொடர்ச்சியாக கேட்டு வருகிறோம்.  ஆனாலும் ஆக்கபூர்வமாக ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதனால் தினசரி எமது கடற்தொழிலில் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நாம் வாழ்வாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றோம். 

மறுபக்கம் மிகப்பெரும் வளம் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை எமது அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அதிகாரம் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மக்கள் நாங்கள் வீதியில் இறங்கி உரிமைகளுக்காக போரடவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

எனவே வடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியிருந்து தொழில் செய்துவரும் தென்பகுதி மீனவர்களை புதன்கிழமைக்குள் அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லையேல் மக்கள் நாங்கள் சட்டத்தை கையில் எடுப்போம். தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற ஒரு தீக்குச்சி எமக்கு போதுமானது. அவ்வாறான இனமோதல் ஒன்று வெடிப்பதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இடமளிக்ககூடாது. 

அவ்வாறு இடம்பெற்றால் அதற்கு பூரணமான பொறுப்பாளிகள் அரசியல்வாதிகளும், அதிகாரி களும் மட்டுமேயாகும் என்றனர்
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment