வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் படுகாயம் - பொருட்கள் சேதம்



வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (02.06.2018) இரவு 9.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் இரவு 9.00 மணியளவில் பட்டா வாகனத்தில் வந்த 15க்கு மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு நின்ற 32 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிலினை தீயிட்டு கொழுத்தி வீட்டின் யன்னல் கண்ணாடி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

 மேலும் கதவினையுடைத்து சுமார் 7லட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்துச் தப்பித்துச் சென்றுள்ளனர் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் போது வீட்டினுள் யன்னல் அருகில் உறங்கிக்கொண்டிருந்த 2மாத கைக்குழந்தை தயார் கட்டிப்பிடித்து காப்பாற்றியதனால் மயிரிழையில் குழந்தைக்கு எதுவித பாதிப்புமின்றி தப்பித்துள்ளது.

இந்நிலையில் காயமடைந்த குறித்த இளைஞன் சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று தவசிகுளம் மற்றும் கூமாங்குளம் பகுதியில் இளைஞர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சுந்திரமூர்த்தி என்கின்ற 36 வயதுடைய இளைஞன் மீது வாளால் வெட்டியதில் குறித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment