Header Ads

test

ரணிலின் பரிசு:காணாமல் போனோர் அலுவலகம்!


இலங்கை அரசினை ஜெனீவாவில் காப்பாற்றும் வேலைத்திட்டத்தை வேகமாக முன்னெடுக்கவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தின் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெனீவாவிலிருந்து ரணில் மைத்திரி அரசை காப்பாற்ற முன்னின்று செயற்படுபவராக நிமல்கா உள்ளார்.இவரை போன்றவர்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் இலங்கை அரசினது நன்றிக்கடனை தீர்க்கும் நடவடிக்கையன்றி தமிழ் மக்களிற்கு தீர்வுதரும் விடயமல்லவென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே காணாமல் போயுள்ள 100 பேரையாவது வெளிக்கொண்டு வாருங்கள் அல்லது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்ப்பட்டியலை வெளியிடுங்கள் அவ்வாறு செய்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் மீது நம்பிக்கை கொள்வோம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் சவால் விடுத்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று நடைபெற்றிருந்த நிலையில் இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கபப்ட்டவர்களின் உறவுகள் காலை 8.30 தொடக்கம் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்திருந்தன.

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்ட்டவாறு மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் வந்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
இதன்போது குறித்த மக்களுடன் கலந்துரையாடிய காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் அவர்களை குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு இருப்பினும் உறவுகள் அதற்க்கு மறுப்பு தெரிவித்த நிலையில் தாங்கள் தமது கலந்துரையாடலை நிறைவு செய்து மீண்டும் தாங்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வந்து தங்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்து சென்றனர்.


இதனை தொடர்ந்து அவர்களுடைய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தனர்.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்குள் காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்;கா பெர்னாண்டோ,ஜெயதீபா புண்ணியமூர்த்தி ,கணபதிப்பிள்ளை வேந்தன், எஸ் லியனகே மிராக் ரகீம், மொகென்ரி பீரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு உறவுகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர் குறித்த சந்திப்பில் சுமார் 50 பேர் வரை கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சென்று சந்தித்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நாங்கள் சுமார் பத்து வருடங்களாக வீதிகளில் போராடிவருகிறோம் பல்வேறு ஆணைக் குழுக்களுக்கள் முன் சாட்சியமளித்தோம் எல்லாமே எமக்கு கண்துடைப்பாகவே இடம்பெறுகிறது எனவே இந்த அலுவலகத்தையும் நாம் நம்ப தயாராக இல்லை என தெரிவித்தனர்.

இந்த அலுவலகம் தொடர்பான பூரண விளக்கங்களை காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் அவர்கள் வழங்கியபோது மக்கள் அந்த அலுவலகம் மீது நம்பிக்கை அற்றவர்களாக அலுவலகத்தை தாம் நம்புவதாக இருப்பின் காணமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் 100 பேரையாவது வெளிக்கொண்டு வந்து எமக்கு காட்டுங்கள் அல்லது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்ப்பட்டியலை வெளியிடுங்கள் அதன் பின்னர் உங்கள் அலுவலகத்தை நம்புகிறோம் என தெரிவித்தனர்.

மக்கள் கூறிய விடயங்களை கருத்திலெடுப்பதாக தெரிவித்து அவர்களுடன் கலந்துரையாடி சென்றதை அடுத்து போராட்ட காரர்களும் கலைந்து சென்றிருந்தனர்.

No comments