Header Ads

test

புலிகள் புதைத்த தங்கம் ? - தோண்டச் சென்றவர்கள் கைது !



இறுதி யுத்த காலத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் நிலத்தடியில் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் தங்கத்தை தேடி தோண்டி எடுப்பதற்காக, சென்ற நான்கு பேர் ஸ்கேனர் இயந்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, நொச்சிமோட்டைப் பிரதேசத்தில் வைத்து, இன்று (15) காலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இவர்களை கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின் படி மேற்கொண்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குறித்த ஸ்கேனர் இயந்திரம் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா மற்றும் எம்பிலிபிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் இயந்திரமும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments