முள்ளியவளையில் இளைஞன் துப்பாக்கி வெடித்ததில் பலி


முல்லைத்தீவு முள்ளிவளை கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதியில் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் முள்ளியவளை 01ம் வட்டாரத்தை சேர்ந்த 22 வயயுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று மாலை வேளை வேட்டைக்காக சட்டவிரோத துப்பாக்கியுடன் கற்பூரப்புல்வெளி காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மிருக வேட்டைக்காக துப்பாக்கியை பயன்படுத்தியபோது துப்பாக்கி வெடித்​ததில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரை நீண்ட நேரமாகியும் காணாத உறவினர்கள் நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, தேடுதல் நடத்தும் போது முள்ளியவளை காட்டுப்பகுதிக்கு அருகில் இருப்பவர்கள் வெடிச்சத்தம் கேட்ட திசையை தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி குறித்த காட்டுப்பகுதியில் இளைஞன் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டுபிடித்து, முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தமைக்கு அமைவாக முள்ளியவளை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைக செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment