புதையல் தோட்டச் சென்றவாகள் கருவிகளுடன் கைது!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1_6Zi504XIAMk7yGcSX30wR70seznzYnPR7LJ3iUGnaFZiLeHgeihYYFXSanZCK-TpZ2jaN-6hMsEESdOlsBQABSyPIG5PAiAU62xkla7ZRNFZJWr62cund1PHg4xfkoPk-XkIGqjEiE/s1600/vavuniya.jpg)
வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் புதையல் தோண்டுவதற்குரிய பொருட்களுடன் வேனில் பயணித்த மூவரை நேற்று விஷேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கண்டியிலிருந்து வேனில் பயணித்த மூவர் நேற்று வவுனியா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் வவுனியா நகர் முழுவதும் பயணித்துள்ளனர்.
இதனையடுத்து மாலை ஈரட்டைபெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே குறித்த வாகனத்தினை விஷேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை மேற்கொண்ட சமயத்தில் வானிலிருந்து ஸ்கானர் இயந்திரத்தினை கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட 38,49,42 வயதுடைய மூவரையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள், வேன் என்பவற்றை ஈரட்டைபெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் இன்றையதினம் சந்தேகநபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment