Header Ads

test

அமெரிக்க நிபுணர்களுடன் சிறிலங்கா வந்துள்ள இராட்சத விமானம்

அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானம் ஒன்று சிறிலங்காவுக்கு  வந்துள்ளது.

சிறிலங்காவின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே, நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின், தேசிய சமுத்திரவியல் மற்றும் வணிமண்டல நிர்வாக பிரிவின், நிபுணர்கள் சிறிலங்கா வந்துள்ளனர்.
சிறப்பு கருவிகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானப்படையின் சி.- 130 விமானத்தில் இந்த நிபுணர்கள் நேற்றுமுன்தினம் இரவு சிறிலங்காவை வந்தடைந்தனர்.
இவர்கள், சிறிலங்காவின் மேலடுக்கு வளிமண்டலத்தில்  ஏற்படும் குழப்பங்கள், மற்றும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
சிறிலங்கா விஞ்ஞானிகளுடன் இணைந்து. அமெரிக்க நிபுணர்கள், 10 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

No comments