
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் சில இன்றும் தாமதமாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று காலை 4.15 மணிக்கு ஜித்தாவில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 282 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இன்று பகல் 01.25 மணி ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 04.50 மணிக்கு சென்னையில் இருந்து வருகை தர இருந்த யூ.எல். 127 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய சுமார் 2 மணித்தியாலங்கள் தாமதமாகியுள்ளன. இன்று காலை 06.10 மணிக்கு பாகிஸ்தானின் லாஹுரில் இருந்து வருகை தர இருந்த விமானம் காலை 9.45 மணிக்கும், அந்த நேரத்திற்கு க்வன்சுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் இன்று பகல் 01.20 மணி ஆகும் என்று கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை இன்று காலை 07.35 மணிக்கு கொச்சி நோக்கி புறப்பட இருந்த விமானம் இன்று பகல் 12.30 மணி வரை தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று காலை 08.36 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட இருந்த விமானம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்களில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம் காரணமாக நேற்றைய தினம் முதல் விமான பயணத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment