Header Ads

test

முல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்



முல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும்  சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி எழுந்துள்ளது.


வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.அவர்கள் அரச நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு போட்டியாக வருமானம் பார்ப்பதில் மும்முரமாக உள்ளனர்.அவர்களிற்கு தற்போதுள்ள முக்கிய வேலையே தற்போது தமது குடும்பத்திற்கு வன்னியில் காணி பிடிப்பதாகும்.அதனால் அவர்கள்இது தொடர்பில் பேசமாட்டார்களென  சொல்லப்படுகின்றது.

இதனிடையே சிங்களவர்களின் காணி பிடிப்பினை  தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்வதுக்காக வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபை பேரவை செயலக மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதுக்கான வழிவகைகளை ஆராய்வதுக்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களுக்கு சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டிருந்தனர்.
இதனடிப்படையில் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கான அழுத்தத்தை மத்திய அரசாங்கத்துக்கு கொடுப்பதுக்காக மாகாணசபை உறுப்பினர்களும்,  வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்து கலந்துரையாடுவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் திட்டமிட்டபடி சந்திப்பு இடம்பெறவில்லை. அதனடிப்படையில் ஒத்திவைக்கப்பட்ட சந்திப்பு எதிர்வரும் 4ஆம் திகதி மாலை 4 மணிக்கு வடமாகாணசபை பேரவை செயலக மண்டபத்தில் நடைபெறும்.

இந்த  சந்திப்பில் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். அதே போல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாமெனவும் அவர் கூறியுள்ளார்.

No comments