Header Ads

test

மட்டக்களப்பில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததையடுத்து, குறித்த நபரை செங்கலடி வைத்தியசாலைக்கு  சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாகவும்  சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவல்துறையினர் மேற் கொண்டுவருகின்றனர்.

No comments