Header Ads

test

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு


வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் பல நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

No comments