Header Ads

test

சித்திரை வருடப்பிறப்பிலும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் சித்திரை வருடப்பிறப்பான இன்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்னால் கடந்த 415 நாள்களாக போராட்டம் மேற்கொள்ளும் உறவுகள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
”புதுவருட தினத்தில் எமது பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டு வாழும் துன்பியல் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளோம். கூட்டரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை . தமிழ் அரசியல் தலைமைகளும் எமது நிலை தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை” என்று உறவினர்கள் தெரிவித்தனர்.


No comments