Header Ads

test

இந்திய கடலோர காவல்படையால் இலங்கை மீனவர்கள் கைது!

இன்று மதியம் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக 12 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் கைது செய்த நிலையில் மீண்டும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த கடலோர காவல்படை வீரர்கள் இந்திய கடல்பகுதியில் இரண்டு பைப்பர் படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில் யாழ்பாணத்தில் இருந்து மீன்பிடிப்பதற்க்காக வந்த போது இந்திய எல்லை என தெரியாமல் இந்திய கடல் பகுதிக்கு வந்ததாக தெரிவித்தனர்
இதனையடுத்து மீனவர்களையும்,படகையும் காரைக்கால் கடலோர காவல்படைக்கு சொந்தமான சி435 ரோந்து கப்பலிடம் ஒப்படைத்தனர்.

இந்திய கடலோர காவல் படையால்  இன்று மொத்தமாக கைது செய்யப்பட்ட 18 மீனவர்களையும் 8 படகையும் நாளை காலை 7மணியளவில் காரைக்கால் துறைமுகத்திற்க்கு அழைத்து வர உள்ளதாக கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments