Header Ads

test

அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணம் – லிங்கேஸ்வரன்


அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றியத்தின் தலைவர் கி.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பிரதேச செயலகம் முன்பாக 4ஆவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) தொடர்கிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரச அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ இன்னும் சாதகமான பதிலைத் தரவில்லை. நாங்கள் வாக்களித்து அனுப்பிய அரசியல்வாதிகளின் அசமந்தப்போக்கே தற்போது இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காரணமாகும்.
இந்த விடயத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து பார்க்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தமையே இந்த பிரதேச செயலகம் இதுவரை தரமுயர்தப்படாமைக்கான காரணம் என நாங்கள் உணர்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments