Header Ads

test

வவுனியாவில் கத்திமுனையில் அலரிவிதை உண்ணக்கொடுத்தமையால் பரபரப்பு

வவுனியாவில் இனம் தெரியாத நபர்களால் சிறுமிகளுக்கு அலரி விதை கத்திமுனையில் உண்ணக் கொடுத்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வியாழக்கிழமை வவுனியா, பொியார்குளத்தைச் சேர்ந்த 15வயதுடைய சிறுமிகள் பாடசலை முடிவடைந்தது வீடு வந்ததும் பாடப் புத்தகம் வாங்குவதற்காகச் சென்றபோது, முச்சக்கரவண்டியில் வந்த இனம் தெரியாதவர்களால் கட்டாயத்தின் பெயரில் சாந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் செல்லபட்டு, துன்புறுத்திய பின்னர் கத்திமுனையில் அலரிவிதை சாப்பிடக் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து தப்பிவந்த சிறுமிகள் நடத்ததைப் உறவினரிடம் கூற இரு சிறு­மி­களும் வவு­னியா பொது மருத்­து­வ­ம­னை­யில் நேற்­றி­ரவு சேர்க்கப்பட்­ட­னர். அவர்­க­ளுக்கு அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சிகிச்சை­ய­ளிக்­கப்­பட்­டது என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.


அப்­போது ஓட்­டோ­வில் வந்த இனந்­தெ­ரி­யா­த­வர்­கள் அவர்­களை கட்­டா­யப்­ப­டுத்தி சாந்­த­பு­ரம் பகு­திக்கு அழைத்­துச் சென்று துன்­பு­றுத்­தி­யு­து­டன், கத்தி முனை­யில் கட்­டா­யப்­ப­டுத்தி அரளி விதை­யை­யும் உண்ண வைத்­த­னர் என்று சிறு­மி­க­ளின் உற­வி­னர்­க­ளால் கூறப்­ப­டு­கின்­றது.


No comments