Header Ads

test

சீனாவல்ல,இந்தியாவே எமது தெரிவு:சுமந்திரன்


சீன நிறுவனம்;, 40 ஆயிரம் வீடுகளை அமைப்பதாக, தனது திட்ட முன்மொழிவைக் கொடுத்துள்ளது. ஆனால், அது கல் வீடல்ல. கொங்கிறீட் போன்ற ஒன்றால் அமைக்கப்படும் வீடாகும். ஆனால் இந்தியா, அதே பணத்துக்கு, கல் வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.அதனாலேயே நாம் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு சம்மதித்தாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது மக்களுக்கு, கல் வீடே விருப்பம். எனவே, இந்தியாவுடன் பேசி, அவ்வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்குமாறு, அரசாங்கத்துக்கு நாம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் வீடுகள் அமைக்கும் திட்டத்தை எந்த நாடு முன்னெடுக்கின்றது என்பது முக்கியமல்ல எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வீடுகள், மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் எனவும்; தெரிவித்துள்ளது.

வடக்கு மக்கள், கல் வீட்டுத் திட்டத்தையே விரும்புகின்றனர் எனத் தெரிவித்த, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், அத்திட்டத்தை, இந்தியாவே முன்வைத்துள்ளதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கில் வீடுகளற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில், இந்தியாவா சீனாவா என்ற அரசியல் இழுபறியால் கடந்து மூன்று வருடங்களாக வீடமைப்பு திட்டம் முடக்கமடைந்துள்ளது.அத்துடன் இந்தியாவே தமது விருப்பமென வாதிட்டுவரும் கூட்டமைப்பு தொடர்புடைய அமைச்சர் மனோகணேசனிடமிருந்து அதனை தட்டிபறிக்க வைத்துள்ளது.

இத்திட்டங்களில் எத்திட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும், அதில் அந்நாடுகளின் தலையீடுகள் உள்ளனவா என்பது தொடர்பாகவும், அண்மைக்காலத்தில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கல் வீட்டுத் திட்டத்தைத் தான் விரும்புகின்றது. அதனைத் தான், எமது மக்கள் விரும்புகின்றார்கள். எனவே, இந்தியாவோ, சீனாவோ இல்லை ரஷ்யாவோ யார் கல் வீட்டைக் கட்டினாலும், நாம் ஏற்றுக்கொள்வோம். எமது மக்களுக்குத் தேவையான, விருப்பமான கல் வீட்டுத் திட்டத்தை நடமுறைப்படுத்த வேண்டும் என்பது தான், கூட்டமைப்பின் நிலைப்பாடு" என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

No comments