கோட்டை யாழ்.மாநகரசபைக்கே:நிறைவேறியது தீர்மானம்!


மத்திய அரசினால் கையகப்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள யாழ்.கோட்டையினை மாநகர நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சுற்றுலா தளமாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா தளமாக மாற்றி சபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுமுள்ளது. 

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இவ்வமர்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வை.கிருபாகரன் பிரேரணையினை முன்வைத்தார். 

மத்திய அரசாங்கம் இங்குள்ள புராதன சின்னங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியினை செய்து வருகின்றார்கள்.  அதனை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது புராதன சின்னங்கள் எமக்கு இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும், அல்லது வரலாறு மாற்றப்பட்டுவிடும். முதலில் யாழ்.கோட்டையினை மாநகர நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்றார்.

இக் கோரிக்கை சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறித்த பிரேரணை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்.கோட்டை படையினருக்கு சொந்தமானதென இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment