Header Ads

test

பகிடிவதைக்கு கடும் நடவடிக்கை !


பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகுடிவதை தொடர்பான குறைபாடுகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகுடிவதைக்கு எதிராக 1998ம் ஆண்டு இலக்கம் 20இன் கீழான பகுடிவதை தடை சட்டத்தின் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

 பகுடிவதை சட்டத்தின் சரத்திற்கு அமைவாக குற்றச் செயல் சட்டத்தின் கீழ் பகுடிவதையை மேற்கொள்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

 அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். பகுடிவதை சட்டத்திற்கு அமைவாக குற்றமிழைத்தவராக காணப்படும் ஒருவருக்கு நீதி மன்றத்தின் மூலம் கடும் வேலையுடன் கூடிய 10 வருட காலம் வரையிலான சிறை தண்டனையை விதிக்க முடியும்.

 கடந்த இரண்டு வருட கல்வி ஆண்டு காலப்பகுதியில் பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யப்பட்டிருந்த மாணவர்களுள் 1989 பேர் பகுடிவதையின் காரணமாக பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

 இதுவரையில் 14 மாணவர்கள் பகுடிவதையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 தீவிரவாத அரசியல் கட்சிக்கு உட்பட்ட குழுவொன்று நாட்டின் உயர்கல்வி துறையை சீர்குலைப்பதற்காக செயல்படுவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

No comments