Header Ads

test

உலங்கு வானூர்தி மூலம் வடக்கிற்கு எழுத்துச் செல்லப்படும் பரீட்சை வினாத் தாள்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக, தற்பொழுது  நடைபெற்றுவரும் உயர் தர பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் உலங்கு வானூர்த்தி மூலம் குறித்த பகுதிக்கு  கொண்டு​​செல்லப்பட்டன​.

​நேற்று மற்றும் இன்றைய தினங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாகவும் கடற்பகுதிகளில் வீசும் வேகமான காற்றின் காரணமாகவும், கடல் மார்க்கமாகப் பயணம் செய்யமுடியாத காரணத்தால், பரீட்சைக்கான வினாத்தாள்களை  உலங்கு வானூர்த்தி  மூலம் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments