ரணிலுடன் அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி பேச்சு


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ பணியகமான அலரி மாளிகையில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், இந்தோ – பசுபிக் ஒத்துழைப்பு மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான செயல்முறைகள் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுக்கள் இடம்பெற்றதாக, சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.

அவரும், சிறிலங்கா பிரதமருடனான இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

அதேவேளை, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவையும், ஜெனரல் ரொபேர்ட் ஹில்டன் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment