மைத்திரி யாழ்ப்பாணம் வரவில்லை!


இலங்கை ஐனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ் மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.எனினும் இந்நிகழ்வில் பங்கெடுப்பரென எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் பலரும் கடைசி நிமிடத்தில் கழன்றுகொண்டதால் நிகழ்வு சோபித்திருக்கவில்லை.

இலங்கை ஐனாதிபதி, பிரதமர் செயலங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.ஜனாதிபதி வருகை தருவதாக தெரிவித்து அரச செயலக பணியாளர்கள் முதல் முதலமைச்சர்,அமைச்சர்கள் ஈறாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களுடன் ஜனாதிபதியை வரவேற்க மாவை முதல்,சுமந்திரன்,ஈ.சரவணபவன் என தமிழரசு தரப்பும் பிரசன்னமாகியிருந்தது.

இந் நிகழ்வில் அரச தரப்பிலிருந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மட்டுமே பங்கெடுத்திருந்தார்.


இதனிடையே தனக்கு சுழிபுரத்தில் படுகொலையான சிறுமி ரெஜினாவின் குடும்பத்தை சந்திக்க நேரமில்லையென்ற வடமாகாண அமைச்சர் அனந்தி நிகழ்வு தொடங்கி முடியும் வரை முன்வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment