கொள்வனவை அதிகரிக்க முகாமையாளருக்கு பணிப்புரை!


வட மாகாண விவசாய நெல் உற்பத்தியாளர்களின் கொள்வனவை அதிகரிக்க விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நெல் சந்தைப்படுத்தும்  வடபிராந்திய  சபையின்  முகாமையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நெல் சந்தைப்படுத்தும்  சபையின் வடபிராந்திய நிலையங்கள் ஊடாக கொள்வனவுகள் இடம்பெற உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் zதிர்வரும் திங்கட்கிழமை முதல் நெல்கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் சிறுபோக நெல் அறுவடையாக  120000 ஆயிரம்  தொன் நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.அதேவேளை  வடமாகாணத்தில் 12000 ஆயிரம் தொன் நெல் அறுவடையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதனால் 5000 ஆயிரம் தொன் நெல் கொள்வனவு என தீர்மானிக்கப்பட்டிருந்தது.விவசாயிகளின் நலன்கருதி கொள்வனவை  அதிகரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டரசி 38  ரூபாவுக்கும் சம்பா  41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்வதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலும் நெல்   கொள்வனவு இடம் பெற உள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார்.
  
  

Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment