Header Ads

test

முல்லை காணிபிடிப்பு:மைத்திரி,ரணிலிற்கு தகவலாம்!

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணி இலங்கை ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அவைத் தலைவர் தலைமையிலான மாகாண சபையினர் அண்மையில் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.


இதன் பின்னர் மாகாண சபையினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடக்கில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது விசேட செயலணி யொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அச் செயலணி தனது நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. இந்நிலையிலேயே முல்லைத்தீவு உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

No comments