தெற்கு லண்டனில் தொடருந்தில் மோதி மூவர் பலி!
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோக் ரெயில் நிலையத்தில் நேற்று காலை மூன்று நபர்கள் ரெயில் மோதி பலியாகியுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எப்படி அவர்கள் மூவரும் தொடருந்தில் மோதி இறந்தனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWSf2RF9wRQQmbXgpy_Zye_f-nqACB_eulT5YLfpaEXIJarW1629lNThyphenhyphenlidZoX0a-2BCF3iGzrVdvEcw_JIP-vZQbQ_kqFEV7dJQBsHBiTBmz7eFWNHBz6pECwKHFRo5pht-02I6dMgc/s1600/loughboroguh+.jpg)
Post a Comment