திருகோணமலையில் இரு குழுக்களிடையே வாள்வெட்டு! 7 பேர் படுகாயம்!

திருகோணமலை உப்புவெளி,  சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக உப்புவெளிக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இக்குழு மோதல் வாள்வெட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்குச் சென்ற திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் சல்லி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு குழுவினருக்கும் இடையே சம்பவதினம் இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த மோதலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 3 இளைஞர்களை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரு குழுக்களுக்கிடையே பழைய விரோதம் காரணமாக மதுபோதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிபொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About சாதனா

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 Comments :

Post a Comment