Header Ads

test

மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 10 இலங்கையர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் மீட்பு!


கொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால், 11.6 கடல் மைல் தொலைவில் இன்றுஅதிகாலை விபத்துக்குள்ளான ´முதா பயனியர்´ என்ற வணிக கப்பலில் இருந்த கப்டன் உட்பட 11 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இவர்களை கடற்படைக்கு சொந்தமான அதிவேக தாக்குதல் படகள் இரண்டு விரைந்து சென்று காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
டொமினிக் குடியரசிற்கு சொந்தமான குறித்த வணிகக் கப்பல் கப்டனின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சரிந்துள்ளதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, உடனடியாக செயற்பட்ட கடற்படையினர் குறித்த கப்பலை நோக்கி வேக தாக்குதல் படகுகள் இரண்டை அனுப்பினர்.
அதன் பின்னர் வேக தாக்குதல் படகுகளின் மூலம் கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பான முறையில் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 10 இலங்கையர்களும் ஒரு இந்தோனேசிய நாட்டவரும் இருந்ததுடன் கப்பலின் கப்டனாக இலங்கையர் ஒருவரே கடமையாற்றியுள்ளார்.
குறித்த கப்பலின் உரிமையாளர் இந்தியராவார். காப்பற்றப்பட்டவர்களை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments