Header Ads

test

பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு


எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டிகளில் முதல் கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் தொடர்ந்து சேவையை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக, இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதல் கிலோ மீற்றருக்காக இதுவரை அறவிடப்பட 50 ரூபா என்ற கட்டணம் 60 ரூபாவாக மாற்றமடையும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் முதல் ஒரு கிலோமீற்றரை அடுத்த மீற்றர்களுக்கான அறவீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறவுள்ள பணிப்பாளர் சபை கூட்டத்தின் பின்னர் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments