மட்டக்களப்பில் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வுகளின் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்கள் குழுவொன்று, மட்டக்களப்புக்கு நேற்றுமுன்தினம் பயணம் மேற்கொண்டிருந்தது. அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட ஜனாதிபதி செயலக அதிகாரிகள் குழுவினரே, மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர். இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மாவடிவேம்பு, மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கு மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு ஆகிய இடங்களுக்கு அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் செங்கலடியிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தின நிகழ்வை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
0 Comments :
Post a Comment