தூத்துக்குடியில் படுகொலை! மட்டக்களப்பில் மக்களுக்கு அஞ்சலி! அரசுக்கு எதிர்ப்பு!
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMIuPH-vzQluSZlfefO_rw227mdoiZs9IFAOcUmFWoYU3ibZHOFi4J-ATRo6GrP55QDWv4PxBWRgktu6MhZZFCtJxdb06fKBHShLqIhtI5DrUa9r0J6ZIIAWE_yhVJByDHGf55UXDl1nw/s1600/batticalo+protest+02.jpg)
இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு, காந்தி பூங்கா முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் ''அழிக்காதே அழிக்காதே தமிழர்களை அழிக்காதே'' , ''இந்திய அரசே படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி வேண்டும்'' போன்ற பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன், படுகொலைக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
அதேநேரம் தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
Post a Comment