Header Ads

test

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - 9 பிரதான சுடர்களை ஏற்றுவதற்கு முடிவு!


எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில், வடக்கு மாகாண சபை நடத் தும் நினை­வேந்­த­லின் முதன்மை சுடர்­களை போரில் பாதிக்­கப் பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­களே ஏற்­ற­வுள்­ள­னர் என்று நினை­வேந்­தல் ஏற்­பாடு தொடர்­பில் ஆரா­யும் வடக்கு மாகாண சபை உறுப் பி­னர்­க­ளின் குழு முடிவெடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபை­யால் நிய­மிக்­கப் பட்­டுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந் தல் நிகழ்வு ஏற்­பாட்­டுக் குழு முள்­ளி­ வாய்க்­கால் மண்­ணில் நேற்­றுக் கூடிக் கலந்­து­ரை­யா­டி­யது. வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், பிறி­முஸ் சிராய்வா, அ.பரஞ்­சோதி, எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் இவர்­க­ளு­டன் ஆ.புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர். வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்கு மேல­தி­க­மாக, புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை, கரைத்­து­றைப்­பற்று பிர­தேச சபை ஆகி­ய­வற்­றின் உறுப்­பி­னர்­க­ளும், முன்­னாள் போரா­ளி­க­ளும் இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்­ட­னர். வடக்கு – கிழக்­கின் எட்டு மாவட்­டங்­க­ளை­யும், மலை­ய­கம் உள்­ளிட்ட ஏனைய மாவட்­டங்­க­ளை­யும் பிர­தி­நி­தித்­து­வம் செய்­யும் வகை­யில் 9 சுடர்­கள் ஏற்­றப்­ப­டும். முதன்­மைச் சுடர் ஏற்­றப்­ப­டாது. 9 சுடர்­கள் ஏற்­றப்­ப­டும். அந்­தந்த மாவட்­டத்­தைச் சேர்ந்த போரில் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் அதனை ஏற்றி வைப்­பார். இதற்கு மேல­தி­க­மாக ஆயி­ரத்து 500 சுடர்­கள் ஏற்­றப்­ப­ட­வுள்­ளன. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் கொள்கை அறிக்­கையை நிகழ்­து­வார். அவ­ரைத் தவிர வேறு யாரை­யும் பேச அனு­ம­திப்­ப­தில்லை என்­றும் நேற்­றைய கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முள்­ளி­வாய்க்­கா­லில் எடுக்­கப்­பட்ட முடி­வு­கள் நேற்று மாலையே, வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது. நாளை மறு­தி­னம் புதன் கிழமை முள்­ளி­வாய்க்­கா­லில் மீண்­டும் கலந்­து­ரை­யாட முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

No comments