Header Ads

test

சிரியாவில் ஐ.எஸ் தாக்குதலில் ரஷ்யப் படையினர் உட்பட 35 இராணுவத்தினர் பலி!

சிரியாவின் டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள்  இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுத கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் நேற்றிரடு நடத்திய தாக்குதலில் 4 ரஷிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments